;
Athirady Tamil News

முட்டை இறக்குமதி தொடர்பான புதிய அறிவிப்பு !!

0

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பறவைக் காய்ச்சல் காணப்படுகின்ற நிலையில், அந்த நாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு இதுவரையில் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கவில்லை.

கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பறவைக் காய்ச்சல் இல்லாத எந்தவொரு நாட்டில் இருந்தும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் இல்லை எனவும் அத்திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொதலாவல தெரிவித்தார்.

பறவைக் காய்ச்சலால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதென்பது கால்நடை சுகாதார நோய்ச் சட்டத்துக்கு முரணானது எனவும் அவர் மேலும் ​தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.