;
Athirady Tamil News

அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி!!

0

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்குள்ள ஒரு பங்களாவில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.

4 பேர் காயம் அடைந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? என்ன காரணம் போன்ற தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. கலிபோர்னியாவில் இந்த மாதத்தில் நடந்த 4-வது துப்பாக்கி சூடு சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.