;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம்!! (படங்கள்)

0

போயா தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாரதிபதி சிறீ விமல தேரர் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு நிலவுவதாக அண்மை காலங்களில் செய்திகள் வெளி வந்திருந்த நிலையில் இன்றைய போயாதினத்தில் இரத்த தானம் வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாமில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் இரத்த தானம் வழங்கி வைத்தனர்.

குறித்த இரத்ததான நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.