;
Athirady Tamil News

இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!!

0

புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் துணைத் தலைவர் பி.கே.தேவதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தனுசு, வேல்முருகன், கோபி, மருதுபாண்டி, செல்வநாதன், செந்தில்குமார், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், ஆறுமுகம், ராஜு பாபு, விநாயக முருகன், திருமலை, லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் முதலீட்டை கொள்ளையடித்த மத்திய அரசின் இமாலய ஊழலை கண்டித்தும், பயனற்ற மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ததை கண்டித்தும், புதுவை மின்துறையின் பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.