;
Athirady Tamil News

ஈராக்கில் மேற்கு மாகாணமான அன்பரில் பதுங்கியிருந்த 22 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!

0

ஈராக் நாட்டின் மேற்கு மாகாணமான அன்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட மொத்தம் 22 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈராக் பயங்கரவாத எதிர்ப்பு படையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் வஹாப் அல்-சாதி கூறுகையில், ‘ருட்பா நகருக்கு வடக்கே உள்ள பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை நோக்கி வான்வழிப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஐஎஸ் மூத்த தலைவர்கள் உட்பட 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெடிகுண்டு பெல்ட்களை அணிந்திருந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது’ என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.