;
Athirady Tamil News

பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா நாற்பதினாயிரம் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் இன்று(17) வழங்கி வைக்கப்பட்டது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR) பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசாவின்(பிரான்ஸ்) நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும்,முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் சமூக சேவையாளர் சாம்பசிவம் தவசங்கரி ஆகியோர் வழங்கி வைத்தனர்.

நிகழ்வுகள் யாவும் இல்ல பொறுப்பதிகாரி அருட் சகோதரி மேரி ஜெயமலர் தலைமையில் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.