;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு பதிலடி – உக்ரைன் தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா..!

0

கீவ்வை தகர்க்க ரஷ்ய இராணுவம் ஏவிய அதிசக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை முதல் முறையாக வானிலேயே தாக்கி அழித்திருப்பதாக உக்ரைன் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

அந்நாட்டின் விமானப்படை தளபதி மைகோலா ஒலேஸ்சுக் டெலிகிராம் அறிக்கையில்,

‘ரஷ்யாவின் கின்சால் வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்காவின் பாட்ரியாட் பாதுகாப்பு அமைப்பு மூலம் வானிலேயே இடைமறித்து தகர்த்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷியாவின் அதிநவீன ஏவுகணையை உக்ரைன் இடைமறித்து அழித்துள்ளது இதுவே முதல்முறையாகும் என தெரிவித்துள்ளார்.

குறித்த கேஎச்-47 ஏவுகணை ரஷ்யாவில் இருந்து மிக்-31கே விமானத்தில் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த ஏவுகணை 2000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலியைப் போல் 5 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய குறித்த ஏவுகணையை உக்ரைன் படையினர் இடைமறித்து அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைமறிப்பதற்கு மிகவும் கடினமான கின்ஷால் வகை ஏவுகணையை அமெரிக்கா அனுப்பிய செயல்திறன் மிக்க பேட்ரியாட் வான்பாதுகாப்பு தளவாடம் கொண்டு உக்ரைன் வீழ்த்தியமை தற்போது பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.