;
Athirady Tamil News

3 பேரின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு !!

0

ஈஸ்டர் ஞாயிறு தினமான 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளான மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஸாப் மற்றும் இருவரின் தந்தையும் கோடீஸ்வர வியாபாரியுமான மொஹமட் இப்ராஹிம் ஆகிய பிரதிவாதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, திங்கட்கிழமை (15) நிராகரித்தார்.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்னெடுக்க முடியாது என்றும் அதி குற்றப்பத்திரிகையின் சட்டப்பூர்வ தன்மை செல்லுபடியாகாது என்றும் அதனை நிராகரித்து பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் அடிப்படை ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட அதிகுற்றப்பத்திரிகையின் செல்லுபடியை சரிபார்க்கும் அதிகாரம் தனது நீதிமன்றத்துக்கு இல்லை என்பதால், அடிப்படை ஆட்சேபனையை நிராகரிப்பதாக அறிவித்த நீதிபதி, சாட்சிய விசாரணையை ஜூன் 6ஆம் திகதி நடத்துவதற்கு திகதி குறித்தார்.

மொஹமட் இப்ராஹிம் மற்றும் மொஹமட் ஹிஸாஸ் ஆகிய பிரதிவாதிளை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, கடந்த 2022ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி பிணையில் விடுலை செய்தார்.

மொஹமட் இப்ராஹிம் என்ற பிரதிவாதி, கொழும்பு சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஆகிய சொகுசு ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஸாப் ஆகியோரின் தந்தையாவார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்திருந்தும் பொலிஸாரிடம் அதை மறைத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.