;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபையை கோமியத்தால் சுத்தம் செய்த காங்கிரசார்!!

0

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். நேற்றும், இன்றும் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையை கோமியம் தெளித்து காங்கிரசார் சுத்தம் செய்தனர்.

பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழலால் சட்டசபை புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதை சீர்படுத்த கோமியம் தெளித்ததாகவும் காங்கிரசார் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.