;
Athirady Tamil News

ஏழுகிணறு பகுதியில் கொள்ளையன் கைது- இரு சக்கர வாகனம், செல்போன்கள் பறிமுதல்!!

0

ஏழுகிணறு, மிண்ட் தெருவில் வசித்து வரும் ஹரிஷ், வ/17, என்பவர் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஏழுகிணறு, அம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கையில் செல்போன் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஹரிஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ஹரிஷ் ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காமேஷ் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் பிடிபட்டார். அவர்களிடம் இருந்து 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட காமேஷ் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட் டார். 17 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.