;
Athirady Tamil News

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

0

நேபாளத்தில் மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் கவெர்பலன்கோச் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள பனேபா-பர்திபஸ் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அப்பேருந்து மலைப்பாதையில் சுமார் 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தின்போது 24 பேர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவரவில்லை. காயமடைந்த பயணிகள் துலிகேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் கூறினர்.

பானேபாவிலிருந்து ரோஷி கிராமப்புற நகராட்சியில் உள்ள சன்குரே பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்ததாகக் போலீஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.