;
Athirady Tamil News

சீனாவின் அறிவிப்பு தொடர்பில் நாணய நிதியத்திடமிருந்து உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும்…

கடன் மறுசீரமைப்பிற்கு சீனா வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியத்தினால் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி…

போலி செய்திகள் குறித்து: ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் அதிரடி முடிவு!!

டிஜிட்டல் உலகில் தவறான தகவலை பரப்புவது, போலி செய்திகள் ஆகியவை சமூகத்தில் குழப்ப நிலையை உண்டு பண்ண கூடியவையாக உள்ளன. டோக்கியோ, போலி செய்திகள் ஆகியவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு எல்லா இடங்களிலும் பரவி காணப்படும் பிரச்சனையாக உள்ளன என…

சீனா நிதியியல் உத்தரவாதம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை –…

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான சீனாவின் நிதியியல் உத்தரவாதம் குறித்து வெளியிடப்படும் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமானவை என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு : தொற்று நோயியல் பிரிவு எச்சரிக்கை!!

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4,387 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுள் 1,426 பேர் மேல் மாகாணத்தை…

மக்கள் மத்தியில் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு தனி இடம் – சாகர காரியவசம்!!

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத அளவிற்கு சட்ட சிக்கலை ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளிகள் தற்போது வெட்கமில்லாமல் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்துரைக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்கு மக்கள் கூட்டத்தை நடத்த வேண்டிய…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெப்ரல் அமைப்பு பொலிஸ்மா அதிபருக்கு…

தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வரும் சூழலில், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகளின் தாமதமானது மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும். அத்தோடு இது புலனாய்வுப்…

ஜி20 கல்வி பணிக்குழு கூட்டம்: சென்னை வந்த பிரதிநிதிகளுக்கு வரவேற்பு !!

சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் ஜி20 கல்வி பணிக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று சென்னை வந்தனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு…

பாகிஸ்தானில் மார்ச் மாதம் இடைத்தேர்தல்- 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி!!

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பி.க்கள் சிலரும், கூட்டணி கட்சிகள் சிலரும் இம்ரான்கான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. அதன்பிறகு இம்ரான்…

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் புகையிரத விபத்தில் உயிரிழப்பு!!

கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து…

செங்கோட்டையன் தனது பெயரை தவறுதலாக ‘செங்கோட்டை’ என்று கூறி உள்ளார்- அமைச்சர்…

ஈரோட்டில் இன்று அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதசார்பற்ற கூட்டணியில் இருக்கின்ற ஒட்டுமொத்த தலைமை கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களிடத்தில் நேரடியாக சென்று பார்த்த…

சிறை அதிகாரியின் மதிய உணவை திருடியதாக நாய் மீது புகார்- சமூக வலைதளத்தில் வைரலான வீடியோவால்…

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஜெயில் அதிகாரி மதிய நேரம் தனது அறையில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அறைக்கு வெளியே போலீஸ் மோப்ப நாய் நின்று கொண்டிருந்தது. அதிகாரி சாப்பிட்டு கொண்டிருந்த போது ஜெயிலில் இருந்த ஒருவர் உதவி…

நாகர்கோவில் அருகே 13 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்- மந்திரவாதி கைது!!

நாகர்கோவில் வடசேரி மேல கலங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் மாந்திரீக பூஜைகள் செய்து வருகிறார். இவரிடம் பள்ளிவிளையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அழைத்து சென்றார். அப்போது மணிகண்டன்…

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேலன் சுவாமிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரச படைகளின் தாக்குதல் மற்று அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள்…

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடிப்பு- 17 பேர் பலி!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 பேர் படுகாயமடைந்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில் மசூதியின் ஒரு பகுதி பயங்கர சேதமடைந்தது. இந்நிலையில், மக்களிடையே…

பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப…

அமெரிக்க வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: குடியரசு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கோபத்தை…

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அமெரிக்க எதிர்கட்சியான குடியரசு கட்சி இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டது. கடந்த முறை குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த…

மின்வெட்டு: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி !!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை திங்கட்கிழமை (30) தாக்கல்…

வவுனியாவில் சிலை அமைப்பதை இடை நிறுத்தியது வீதி அபிவிருத்தி அதிகாரசபை!! (படங்கள்)

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் தலைவர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் ஆகிய இருவருக்கும் சிலைகள் நிறுவுவதற்கு நகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது எனினும்…

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் குறைந்தளவான உறுப்பினர்களுடன் நடைபெற்றது.!!…

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் குறைந்தளவான உறுப்பினர்களுடன் நடைபெற்றது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணியளவில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது. மணிவண்ணன் அணி, ரெலோ, புளொட்…

துருக்கி மாணவர்களுக்கு கைவினை பயிற்சி!!

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவாக புதுவை வருகின்றனர். இவர்கள் புதுவையில் உள்ள கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த கல்விச் சுற்றுலா பயன்படுகிறது.…

தேர்தல் திகதி குறித்த அறிவிப்பு!!

மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கான அறிவிப்புகள் அனைத்து மாவட்டங்களில் இருந்து அரசாங்க அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இதுவரை கிடைத்துள்ள…

PUCSL வினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம்!!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து…

வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை!!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய…

மதுக்கடையை எதிர்த்து போராடிய பெண்கள் மீது வழக்கு தொடர்வதா?-வைத்திலிங்கம் எம்.பி. கேள்வி!!

காங்கிரஸ் ஒற்றுமை ஆலோசனை கூட்டம் புதுவை 45 அடி சாலையில் உள்ள செந்தில் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:- கடந்த மாதம் வரை ரேஷன் கடையில் அரிசி…

மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம்!! (PHOTOS)

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைவியாக கருதப்படும் பெண் மோதரையில் கைது!!

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் தலைவியாகவும் கருதப்படும் பெண் ஒருவர் நேற்று (ஜன 29) மோதரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர். சந்தேக…

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்கும் பணிகள்…

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலை துண்டாக்கி மீட்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு!!

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, அன்னியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி ஆகியவை பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கொடுக்க இருந்த ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 200 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை…

ஹிருணிக்காவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது!

கொழும்பின் தெமட்டகொட பிரதேசத்தில் 2015ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் பெப்ரவரி…

தமிழ் அரசு கட்சியின் வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்!!

தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, வேட்பாளர் அற்புதம் சற்குணதாஸ் தெரிவித்தார். இவர், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் அரசு கட்சி சார்பில் போட்டியிடுகின்றார். திடீர்…

மண் காப்போம் இயக்கத்திற்காக 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி!!

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த…

வடமராட்சி கிழக்கில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,759,130 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,759,130 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 674,815,191 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 646,947,876 பேர்…

ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை எதிரொலி: கடும் பாதுகாப்பு- வாகனங்கள் சோதனை…

சென்னையில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஜி20 கல்வி பணிக்குழு முதல் கூட்டம் நடைபெறுகிறது. அதில் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள…