;
Athirady Tamil News

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக, ஆடி அமாவாசை உணவு வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக, ஆடி அமாவாசை ஆத்ம திருப்திக்கான உணவு வழங்கும் நிகழ்வு.
##################################
யாழ் .அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிப்பவர்களுமான திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் தனது தந்தையாரான அமரர்.மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு விசேட மதிய உணவினை வவுனியா கிராமத்தில் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திக்காக வவுனியா கிராமமொன்றில் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அனேக கிராம மக்கள் ஒன்றுகூடி வந்து அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆடி அமாவாசை விரத விசேட மதிய போசணத்தில் கலந்து சிறப்பித்தனர்.

அமரர் திருவுருவ படத்திற்கு படையலிட்டு, விளக்கேற்றி தீபாராதணை காட்டி வணங்க சிறுமியர்கள் தேவாரபாராயணம் இசைத்தனர். தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர் அவர்களினால் அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் மகளான சுவிஸ் வாழ் திருமதி.கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்களின் நிதிப்பங்களிப்பில் ஆடி அமாவாசை விரத நிகழ்வு நடைபெறுவது பற்றியும் இன்னும் பல வாழ்வாதார உதவிகளும் அன்னாரின் பெயரில் ஏற்கனவே நடைபெற்றுள்ளதையும் கூறப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் 15 ஆவது நினைவு மற்றும் ஆடி அமாவாசை விரத நாளான இன்று அவரது நினைவாக விசேட மதிய உணவு மற்றும் பலவேறு குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை அமரர் செல்லத்துரை அவர்களின் மகளும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வசிக்கும் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக வவுனியா கற்குளத்தில் வசிக்கும் முன்னால் போராளி சிவசோதி லட்சுமி குடும்பத்திற்கு வீட்டுக்கான கூரைத் தகரங்களும், சிதம்பரபுரம் பிரதான வீதியில் வடைக் கடை நடாத்தி வரும் திருமதி சுப்பிரமணியம் முத்துலட்சுமி அம்மாவுக்கு கடைக்கான கூரைத் தகரங்களும் திருமதி கேமேஸ்வரி அவர்களின் நிதிப்பங்களிப்பில் தனது தந்தையாரின் நினைவாக ஆடி அமாவாசை விரத நாளில் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நிதிப்பங்களிப்பு தந்து சமூகப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி. சுபாஸ்கரன் (ராஜு) கேமேஸ்வரி தம்பதிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறையவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

08.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.