நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை
தெற்கு நேபாளத்தில் இந்திய எல்லையோர மாதேஷ், கோஷி மாகாணங்களில் கடந்த சில நாள்களாக நிலவிவந்த மதக் கலவர மோதல்கள் தணிந்து, திங்கள்கிழமை மீண்டும் இயல்புநிலை திரும்பியது.
கோஷி மாகாணத்தின் சன்சாரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரு சமூகத்தினா் நடத்திய தனித்தனி நிகழ்ச்சிகளின் போது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதில் 3 போ் உயிரிழந்த நிலையில், வன்முறை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.
தற்போது வன்முறை தணிந்து சட்டம்-ஒழுங்கு நிலை சீரடைந்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகள் தளா்த்தப்பட்டுள்ளன.