;
Athirady Tamil News

டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்கள் வழங்கல்.. (படங்கள்)

0

டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொருட்க்கள் வழங்கல்.. (படங்கள்)

முன்னாள் புளொட் ஆதரவாளரான டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி வழங்கினார் லண்டன் புளொட் உறுப்பினர்..
#############################

வவுனியா ராணி மில் வீதியில் வசிக்கும் முன்னாள் புளொட் ஆதரவாளர் மறைந்த அமரர்.டெய்லர் கந்தசாமி அவர்களின் மனைவி பிள்ளைகளுக்கும், திருமணமாகிய அன்னாரின் கணவரில்லாத மகள் குடும்பத்திற்கும் லண்டனில் வசிக்கும் “மக்கள் போராட்டத் தளபதி மாணிக்கதாசன்” அவர்களது மைத்துனரும், பிரித்தானியா புளொட் கிளையின் உறுப்பினருமான சின்ன முகுந்தன் என அழைக்கப்படும் முத்துராசா முகுந்தன் அவர்கள் தனது நிநிப்பங்களிப்பில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலைமையினை கருத்திற் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக உலருணவுப் பொதியினை வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக அமரர் டெய்லர் கந்தசாமி அவர்களின் திருமண முடித்து வீதி விபத்தில் கணவர் இழந்ந நிலையில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருமதி சுகர்சினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு வழங்கி வைக்கப்பட்ட போது இவரது குடும்பத்தின் பின்னணியும் புளொட் அமைப்போடும் முக்கியமாக அமரர் தளபதி மாணிக்கதாசன் அவர்களோடும் உள்ள தொடர்புகளும் நன்கறியப்பட்பது..

அந்தவகையில் தளபதி மாணிக்கதாசன் அவர்களது மைத்துனரும், லண்டன் புளொட் உறுப்பினரும், அமரர் டெய்லர் கந்தசாமி அவர்களது குடும்ப நண்பருமான சின்ன முகுந்தன் என அழைக்கப்படும் திரு முத்துராசா முகுந்தன் அவர்கள் “அமரர் டெய்லர் குடும்பத்திற்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்” என மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விரும்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்றைய நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப.பினர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அமரர் டெய்லர் கந்தசாமி அவர்களின் குடும்பத்திற்கு அதாவது மனைவி பிள்ளைகளுக்கு இரண்டு உலருணவுப் பொதிகளையும், அவரது விதவையாக உள்ள இரண்டாவது மகளுக்கும் வாழ்வாதார உதவியாக உலருணவுப்.பொதிகளை வழங்கி வைத்தார்.

அத்துடன் நாளையதினம் கால் நடக்க முடியாத விசேட தேவைக்கு உட்பட்ட வறியகுடும்பத்தை சேர்ந்த இன்னுமொருவருக்கும் லண்டன் வாழ் சின்னமுகுந்தனின் நிதிப் பங்களிப்பில் “கிளைச்சர்” வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து வேலையில்லாத நிலையும் வறுமையும் அதிகரித்துள்ள போது புலம்பெயர் வாழ் தாயக சொந்தங்களின் இவ்வாறான உதவிகளே பேருதவியாக இருக்கிறது. அதனை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இடைவிடாத சமூகநேயப் பணிகளை முன்னெடுத்தவண்ணமுள்ளது.

இப்பணிக்கு உதவி செய்யும் அத்துணை நல்லுள்ளங்களையும் தாயகத்து உறவுகள் சார்பில் வாழ்த்தி வணங்குகின்றோம். அத்தோடு இன்றைய நாளில் உலருணவுப் பொதிகளை வழங்க நிதிப் பங்களிப்பினை வழங்கிய சின்ன முகுந்தன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

26.11.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.