;
Athirady Tamil News

பெந்தோட்டை கடற்பரப்பில் பாரசூட்டில் பறந்த வெளிநாட்டு பலி

0

காலி- பெந்தோட்டை கடற்பரப்பில் இடம்பெற்ற இலகுரக வான்பாராசூட் (Light Air Parachute) விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) மாலை, கடற்கரைப் பகுதியில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்ட இலகுரக பாராசூட் இயந்திரம் ஒன்றில் பயணித்த வெளிநாட்டு பெண் மற்றும் அதை இயக்கிய நபருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பாராசூட்டை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.