;
Athirady Tamil News

28வது இனிய திருமண நாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா – ஸ்ரீரஞ்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ)

0

28வது இனிய திருமண நாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா – ஸ்ரீரஞ்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ)

இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..!

இனிமையான – இவ்
இல்லறத்திற்கு சாட்சியாய்
மூன்று மக்கட் செல்வங்களைப்
பெற்றெடுத்து பேணி வளர்த்து
வித்தைதனைக் கற்றுக் கொடுத்து
மாண்புறவே மக்களை மாநிலத்தில்
பேரோடு புகழ்பெறவே வாழவைத்து
இன்புறும் இத்திருமண நன்நாளில்

இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!

இந்த அருமையான
உறவுக்கு நீங்கள்
இருவரும் அழகான
அர்த்தத்தை கொடுக்கிறீர்கள்..!

இந்த திருமண நாளிலும்
இனிவரும் நாட்களிலும்
மகிழ்ச்சியாக பயணிக்க
இனிய திருமண நாள்
நல் வாழ்த்துக்கள்..!

இன்றையதினம் தமது 28வது திருமண நாளைக் கொண்டாடும் யாழ்.கல்வியங்காடு மற்றும் யாழ்.கொக்குவிலைச் சேர்ந்த திரு.திருமதி.லோகராஜா, ஸ்ரீரஞ்சினி தம்பதிகள் சார்பில் அவரது பிள்ளைகள் செல்வன்.ஆரோன், செல்வன்.சாரோன், செல்வி.ஒமேகா ஆகியோர் வழங்கிய நிதிப்பங்களிப்பில் மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்பஸ்தரான ரமேஷ் எனும் திரு.இராஜசிங்கம் என்பவருக்கு “மீன்பிடிக்கான தோணி” ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

மடடக்கலப்பு குருநகர் பிரதேசத்தில் வதியும் ரமேஷ் எனும் திரு.இராஜசிங்கம் என்பவர் “தான் சிலருடன் இணைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால்,, தனது வருமானம் குடும்ப சூழ்நிலைக்கு காணாமல் இருப்பதினால், தனக்கு “மீன்பிடிக்கான தோணி” ஒன்று வாங்கித் தருமாறு”, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் எழுத்து மூலம் கோரி இருந்தார். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நீண்டகால உறுப்பினர் என்பதினால் இவரது கோரிக்கையை அவ்வமைப்பின் உபதலைவர்களில் ஒருவரான திரு.கேசவன் எம்மிடம் விண்ணப்பித்து இருந்தார்.

மேற்படிக் கோரிக்கையை இன்றையதினம் தமது 29வது திருமண நாளைக் கொண்டாடும் யாழ்.கல்வியங்காடு மற்றும் யாழ்.கொக்குவிலைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகளின் கவனத்துக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொண்டு சென்றதும்,

தமது பெற்றோரின் திருமணநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகள் செல்வன்.ஆரோன், செல்வன்.சாரோன், செல்வி.ஒமேகா ஆகியோர் இதனை வழங்கி வைக்குமாறு, தமது நிதிப் பங்களிப்பை வழங்கி வைத்து மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச தவிசாளர் திரு.சண்முகராஜா விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க நடைபெற்றது. இவர்களுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில், மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச உபதவிசாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், உபதலைவர்களில் ஒருவருமான திரு.பொன் செல்லத்துரை (தோழர்.கேசவன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

இன்றையதினம் தமது 28வது திருமண நாளைக் கொண்டாடும் யாழ்.கல்வியங்காடு மற்றும் யாழ்.கொக்குவிலைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சினி தம்பதிகளை பயனாளி குடும்பத்தினர் மற்றும் தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தி சந்தோஷமடைவதுடன், நிதிப்பங்களிப்பு வழங்கிய அவர்களின் பிள்ளைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மணிக்கதாசன் நற்பணி மன்றம்
வவுனியா இலங்கை.

28.08.2022

228வது இனிய திருமணநாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா – ஸ்ரீரஞ்சினி தம்பதிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.