;
Athirady Tamil News

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ)

0

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (படங்கள், வீடியோ)
#############################

லண்டனில் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவரது பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் உள்ள மக்களுடன் சிறப்பாகக் கொண்டாடியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், சமூக சமயத் தொண்டருமான கண்ணன் ஐயா என அன்புடன் அழைக்கப்படும் கருணலிங்கம் அவர்களின் மனைவியும், அக்குடும்பத்தின் மூத்த மருமகளுமான லண்டனில் வதியும் திருமதி.ஆனந்தி கருணலிங்கம் அவர்களின் இன்றைய பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் கொண்டாடப்பட்ட்து.

வவுனியா கிராமமொன்றில் குறிப்பிட்ட பிரதேச சிறுவர்கள் சிறுமிகள் மற்றும் பெரியோர்களென பலரும் கலந்து கொண்டு திருமதி ஆனந்தி அக்கா அவர்களது பிறந்தநாள் நிகழ்வை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் பிறந்தநாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி அகமகிழ்ந்து கொண்டாடினார்கள். பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது..

இதேவேளை இன்றையதினம் நடைபெறும் கருணலிங்கம், ஆனந்தி தம்பதிகளின் ஏகபுத்திரி மதுராவின் திருமண விழாவை முன்னிட்டு “திவாகரன் மதுரா தம்பதிகள்” சீரும்சிறப்புமாக வாழ வேண்டி பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.

தாயக சொந்தங்களின் தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில், அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தொடர்ந்து தனது பங்களிப்பினை செய்து வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி ஆனந்தி கருணைலிங்கம் அவர்களையும் திருமண பந்தத்தில் இணையும் திரு.திருமதி திவாகரன் மதுரா தம்பதிகளையும் தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தேக ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

09.06.2023

திருமதி ஆனந்தி கண்ணன் அவர்களின் பிறந்தநாள் வன்னிக் கிராமமொன்றில் சிறப்பாக நடைபெற்றது.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.