;
Athirady Tamil News

மார்க்கெட்டுக்கு சென்ற 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…!!

0

மேற்கு வங்காள மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதான 9-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று மார்க்கெட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இ-ரிக்‌ஷாவில் வந்த தொழிலாளி அந்த மாணவியிடம் தான் மார்க்கெட்டில் கொண்டு விடுவதாக தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி அந்த மாணவி ரிக்‌ஷாவில் ஏறினார்.

சிறிது தூரம் சென்றதும், நண்பர் ஒருவர் ரிக்‌ஷாவில் ஏறினார். பின்னர் இருவரும் மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து மாணவியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கண்ணீருடன் மார்க்கெட்டுக்கு நடந்து வந்து அங்கு இருந்தவர்களிடம் நடந்த விபரம் குறித்து கூறினார்.

இதுபற்றி உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ரிக்‌ஷா டிரைவரை கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர். கைதான ரிக்‌ஷா டிரைவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.