;
Athirady Tamil News

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டி!!

0

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டி இன்று 05.02.2022 சனி காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் நடைபெற்றது. போட்டியில் வடபுல பாடசாலைகள் சார்ந்த 15 மாணவர்களுக்கு இறுதிப் போட்டி நடைபெற்றது. (முதலில் 54 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்) .

நடுவர்களாக பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா, யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் ஈ. குமரன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் பேராசிரியர் சிவலிங்கராஜா மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.