;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் தாதியர் வேலை நிறுத்தம்!!

0

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் திங்கட்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து , பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன் வைத்து தீர்வு கிடைக்கும் வரையில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.