;
Athirady Tamil News

யாழ்.கட்டுவானில் கசிப்புக்குகை முற்றுகை – ஒருவர் கைது – 20 லீட்டர் கசிப்பு மீட்பு!!

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கட்டுவான் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்ட பொலிஸார் , அங்கிருந்த ஒருவரை கைது செய்ததுடன் , ஆயிரம் லீட்டர் கோடா மற்றும் 20 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தினை பொலிஸாருடன் இணைந்து நேற்றைய தினம் முற்றுகையிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபரை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மீட்கப்பட்ட பொருட்களை சான்று பொருட்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.