;
Athirady Tamil News

வடமாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலில் வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் சேவை!! (படங்கள்)

0

வட மாகாண ஆளுனரின் திட்டமிடலுக்கு அமைய வடமாகாண நடமாடும் சேவை ஒன்று வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக இடம்பெற்றது.

வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று (24.02) இடம்பெற்றது.

இதில் வடமாகாணத்திற்குட்பட்ட காணித் திணைக்களம், போக்குவரத்து திணைக்களம், விவசாய அமைச்சு, கல்வி அமைச்சு, ஆட்பதிவு திணைக்களம், விவசாய அமைச்சு, சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி அமைச்சு, நீர்ப்பாசன திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், பிறப்பு – இறப்பு – விவாகப் பதிவு திணைக்களம், கால்நடை உற்பத்தி, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல திணைக்களுங்களும், அமைச்சுக்களும் இந்த நடமாடும் சேவையில் பங்கேற்றன.

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா அவர்களின் வழிப்படுத்தலில் நடைபெற்ற இவ் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் பலரும் கலந்து கொண்டு நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, வடமாகாண அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.