;
Athirady Tamil News

PKM படக்குழுவின் நன்றி கூறும் நிகழ்வு!! (படங்கள்)

0

புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தில் பணியாற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் படக்குழுவினரின் நன்றி கூறும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

யாழ். திவ்யமஹால் மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.

படத்தில் பணியாற்றியவர்களுக்கான கௌரவிப்புக்களும் , பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக செயற்பட்டவர்கள், ஆதரவு அளித்தவர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி நன்றியும் கூறப்பட்டது.

கடந்த வருட இறுதியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் வெளியான “புத்திகெட்ட மனிதர் எல்லாம்“ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு 13 ஆவது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் 4 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகை (சிந்துஜா), சிறந்த ஒளிப்பதிவாளர் (தர்மலிங்கம்), சிறந்த இசையமைப்பாளர் (பூவன் மதீசன்), சிறந்த திரைக்கதை (சிவராஜ்) ஆகிய விருதுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.