;
Athirady Tamil News

கிளிநொச்சி மேல் நீதிமன்றுக்கு ஆளணி நியமனத்தை வழங்கியது நீதிச் சேவை ஆணைக்குழு!!

0

கிளிநொச்சி மேல் நீதிமன்றை ஆரம்பிக்கும் முதல் கட்ட ஆளணி நியமனத்தை நீதிச் சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது.

கிளிநொச்சியில் மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதி கடந்த ஜனவரி மாதம் நீதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி சகாதீன், கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிச் சேவை ஆணைக்குழு நியமித்தது.

இந்த நிலையில் நீதிச் சேவை ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள பதிவாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் பட்டியல்களை உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

அவற்றில் கிளிநொச்சி மேல் நீதிமன்றுக்கு பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிளிநொச்சி மேல் நீதிமன்றுக்கு சிற்றூழியர் நியமனங்களை நீதி அமைச்சு வழங்கவேண்டும்.

கிளிநொச்சி மேல் நீதிமன்ற பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.