;
Athirady Tamil News

ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி…!!

0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பேஸ்-புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷிய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் குடிமக்களுக்கு எதிரான நம்பகத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.