;
Athirady Tamil News

நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்து!! (படங்கள்)

0

நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் சாரதிக்கு எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளரை ஏற்றிச் செல்லும் வான் என தெரிவிக்கப்பட்டது. பொறியியலாளரை வீட்டில் இறக்கி விட்டு வரும் போது இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வானின் சில்லு காற்று குறைந்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதியது.
மன்னாரைச் சேர்ந்த வான் மற்றும் சாரதி என அறியமுடிகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.