;
Athirady Tamil News

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி!! (படங்கள்)

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.

ஒட்டுசுட்டான் வித்தியாபுரத்தைச் சேர்ந்த நமசிவாயம் டிலக்சன்(வயது 25) என்பவரே உயிரிழந்தார்.

இவர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினருமாவார். நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தை அளவீடு செய்வதற்காக சென்றவேளை படகு கவிழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சடலத்தை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.