;
Athirady Tamil News

10ஆம் திகதிவரை 10% பஸ்களே இயங்கும் !!

0

ஜூலை 10ஆம் திகதி வரை 10 சதவீத தனியார் பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை முதல் பஸ் கட்டணத்தை 30 சதவீதம் அதிகரிக்குமாறும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாக அதிகரிக்குமாறும் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பஸ்கட்டண திருத்த பரிந்துரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் போக்குவரத்து அமைச்சிடம் இன்று (29) கையளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.