;
Athirady Tamil News

பிரிகேடியர் குறித்த செய்தி பொய் !!

0

பிரதமர் காரியாலயத்துக்கு முன்பாக கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சேவையில் இருந்த பிரிகேடியர் அனில் சோமவீர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

குறித்த அதிகாரி, வேறு கடமைகளுக்காக இராணுவ தலைமையகத்துக்கு இணைக்கப்பட்டுள்ளார் என்றும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்லவும் ஊடகவியலாளர் மாநாடொன்றில் பிரிகேடியரை நீக்கியமை குறித்த செய்தி வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.