;
Athirady Tamil News

காத்தான்குடியில் கடத்தல்; சந்தேகநபர் கைது!!

0

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வான், மோட்டர் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, மற்றொரு சந்தேகநபர் வௌிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் ​தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஒல்லிக்குளம் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆசிரியருக்கும் காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த கடத்தலில் ஈடுபட்டவர்களான இரு சகோதர்களுக்கும் இடையே காணி விவகாரம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகிறது.

வாடகைக்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட வான் ஒன்றில் கடந்த 6ஆம் திகதி இரவு ஆசிரியர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறி மெத்தைப்பள்ளி வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது வானில் வந்த இருவரும் அவரை வழிமறித்து வானில் இழுத்து ஏற்றி கடத்தி சென்றனர்.

இதன் பின்னர் கடத்தல்காரர்கள் தங்களது வீட்டுக்குக்கொண்டு சென்று அவரை தாக்கி இரு தினங்கள் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் 8ஆம் திகதி ஆரையம்பதி – மாவிலங்குதுறை பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளதையடுத்து அவரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.