;
Athirady Tamil News

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – இராணுவ அதிகாரி உயிரிழப்பு!!

0

வெல்லவாய – எல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று(11) வெல்லவாய காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதியைக் கடக்க முயன்ற நாய் ஒன்று வீதியில் வருகைதந்த உந்துருளி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது உந்துருளியில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்களில் உயிரிழந்தவர் தம்பகல்ல பிரதேசத்தில் வசிக்கும் நாற்பத்தொரு வயதுடைய இராணுவ அதிகாரி ஆவார்.

விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறை மேற்கொண்டு வருவதுடன், இச்சம்பவம் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கருவியிலும் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.