;
Athirady Tamil News

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!!

0

மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2023ஆம் ஆன்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கும் விசேட அமர்வானது இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இவ்விசேட சபை அமர்வில் மாநகர பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், மாநகர பிரதி முதல்வர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாநகர முதல்வரினால் 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் பதீட்டின் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

வாக்கெடுப்பின் போது பாதீட்டுக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும், நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பயணம் காரணமாக சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான பாதீடு 08 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன், 2018 முதல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டு வாக்கெடுப்புகளில் தோல்வியுறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.