;
Athirady Tamil News

வவுனியாவில் மதுபோதையில் ரவுடிக்குழு அட்டகாசம்!!

0

வவுனியாவில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்த மதுபோதையில் இருந்த இளைஞர்களை உள்ளடக்கிய ரவுடிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை வர்த்தக நிலையத்தினுள் வெடிக்கச் செய்துள்ளனர். ​

இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர் வாடிக்கையாளர்கள் நிற்பதால் எதனையும் செய்து விடாதீர்கள் என கும்பிட்ட போதிலும், அவர்கள் பட்டாசுகளை கொழுத்தியதால் மக்கள் நாலா திசைக்கும் பதறி ஓடியுள்ளனர். பட்டாசு வெடித்தமையால் கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முன் பகுதி சிறியளவில் சேதமடைந்துள்ளது. ​

இச்சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.