;
Athirady Tamil News

2 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச அரிசி!!

0

சமுர்த்தி பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு, மாதாந்தம் 10 கிலோ கிராம் அரிசி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

குறைந்த வருமானம் பெறுவோரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக 61,600 மெட்ரிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (16) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.