;
Athirady Tamil News

இந்தியாவில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 17-ந் தேதி பாதிப்பு 79 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்களாக பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 118 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 49 ஆயிரத்து 346 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1,934 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 26 குறைவாகும். தொற்று பாதிப்பால் உத்தரபிரதேசத்தில் நேற்று ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,735 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.