;
Athirady Tamil News

தலைவர் பதவியிலிருந்து விலக மயந்த திசாநாயக்க தீர்மானம்!!

0

அரசாங்க நிதி பற்றிய குழுவின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அப்பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இந்த முடிவு குறித்து மயந்த திசாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.