;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் நக்சலைட்டு தாக்குதலில் 3 போலீஸ்காரர்கள் பலி!!

0

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று காலை 9 மணி அளவில் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்மா மாவட்டம் ஜாகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

போலீசாரும் திருப்பி சுட்டார்கள். சிறிது நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ராமுராம் நாக், குஞ்சம் ஜோகா மற்றும் சைனிக் வஞ்சம் பீமா ஆகிய 3 போலீஸ்காரர்கள் இறந்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.