;
Athirady Tamil News

சி.ஏ.பி.எப். தேர்வு தமிழிலும் நடத்தப்படும்- அமித்ஷா அறிவிப்பு!!

0

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப்படைகளில் ஆட்களை சேர்க்க ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. நாடு முழுவதும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சி.ஏ.பி.எப். தேர்வு இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 15 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 15 மொழிகளில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் முடிவால் காவலர் பணிக்கு தேர்வு எழுத உள்ள லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் அமித்ஷா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.