;
Athirady Tamil News

நல்ல பள்ளிக்கூடம் கட்டி தாருங்கள்- பிரதமர் மோடிக்கு சிறுமி கோரிக்கை!!

0

ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் லோஹாய்-மல்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி சீரத்நாஸ். இவர் பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்து பேசும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிறுமி சில இடங்களை காட்டி விளக்குகிறார். வீடியோவில், மோடிஜி, நான் இங்கு அரசு பள்ளியில் படித்து வருகிறேன். தயவு செய்து எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள். தரை எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்று பாருங்கள்.

எங்களை இங்கேதான் உட்கார வைக்கிறார்கள். எங்கள் பள்ளி இருக்கும் பெரிய கட்டிடத்தை உங்களுக்கு காட்டுகிறேன். இந்த கட்டிடம் 5 வருடங்களாக எவ்வளவு அழுக்காக இருக்கிறது என பாருங்கள். இதுதான் எங்கள் வகுப்பறை. எங்களுக்காக ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை உருவாக்கி தருமாறு கேட்டு கொள்கிறேன். தரையில் உட்கார்ந்தால் எங்களது சீருடைகள் அழுக்காகிறது. சீருடை அழுக்காகிவிட்டால் அம்மா எங்களை அடிக்கிறார்.

தயவு செய்து மோடிஜி பள்ளியின் உட்கட்டமைப்பை அழகாக கட்டி கொடுங்கள் என உங்களிடம் கேட்டு கொள்கிறேன். மோடிஜி நீங்கள் எல்லோருடைய பேச்சையும் கேட்கிறீர்கள். தயவு செய்து நான் சொல்வதையும் கேளுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை கட்டி தாருங்கள் என அந்த வீடியோவில் சிறுமி கூறுகிறார். இந்த வீடியோ சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.