;
Athirady Tamil News

தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்க நல்லூரில் உண்ணாநோன்பு போராட்டம்!! (PHOTOS)

0

தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்
என்ற தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்புப் போராட்டமும் கையெழுத்துப் போராட்டமும் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் முன்பாக இன்று காலை இப்போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இப்போராட்டத்தில் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள்,தென்கயிலை ஆதீன முதல்வர் சிவத்திரு அகத்தியர் அடிகளார், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன்,

அகில இலங்கை சைவ மகா சபை, தமிழ்ச் சைவப் பேரவை மற்றும் சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிறிஸ்தவ மதத் தலைவர்கள், அரிசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.