;
Athirady Tamil News

ஜோ பைடனுக்கு கொலை அச்சுறுத்தல் – வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு..!

0

அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடைகள் மீது சந்தேக நபர் ஒருவர் கனரக வாகனம் கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனை கொல்ல முயற்சித்தாக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு 10 மணியளவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு தடைகள் மீது, குறித்த நபர் கனரக வாகனத்தை கொண்டு மோதியுள்ளார் .

இந்நிலையில் , குறித்த வாகனத்திற்குள் நாசிக் கொடி ஒன்றை அந்நாட்டு காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் மீது அதிபர் ஜோ பைடன் அல்லது அவரது குடும்ப உறுப்பினரைக் கொல்ல, கடத்த அல்லது தீங்கு விளைவிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை சதுக்கத்தைச் சுற்றியுள்ள சில சாலைகள் மற்றும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின்போது பைடன் வெள்ளை மாளிகையில் இருந்தார் என்றும், மாளிகை மிகவும் பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் நபர்கள் ஊடுருவ முடியாது என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.