;
Athirady Tamil News

விமானத்தில் உயிரிழந்த சிறுமி-நடுவானில் நிகழ்ந்த சோகம் !

0

இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நியுயோக் நோக்கி சென்ற TK003 என்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, 11 வயதுடைய சிறுமி பயணத்தின் போது நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அச்சிறுமி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டிருந்த நிலையில் திடீரென சுயநினைவின்றி விழுந்ததால் அச் சிறுமிக்கு விமான ஊழியர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.

அதன்பின், இச் சிறுமியை சிகிச்சைக்கு கொண்டு செல்ல விமானம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இருந்தும் அச் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என விமான நிறுவனம் தெரிவித்தது.

இச் சிறுமியின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

அதேநேரத்தில் குழந்தையின் இறப்புக்கு விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நான்கரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் மீண்டும் நியுயோர்க்கிற்கு புறப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.