;
Athirady Tamil News

வரிகளிலிருந்து விரைவில் விடுதலை கிட்டும்!!

0

மக்களுக்கு வரி நிவாரணத்தை வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேற்கூறியவை தொடர்பான தற்போதுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக, கட்டுநாயக்கவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலிருந்து 12 மாதங்கள் கடந்துவிட்டதாகவும், இன்று மக்கள் எதிர்காலத்தைப் பற்றி நேர்மறையாக சிந்திக்கக் கூடிய நிலையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.