;
Athirady Tamil News

பெற்ற பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை!!

0

தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (28) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபரான தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை, கொபேகனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.