;
Athirady Tamil News

பெங்களூரு நகரில் ரூ.6-க்கு ஆட்டோ சவாரி சென்ற பெண்- டுவிட்டர் பதிவு வைரல்!!

0

நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு நகரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அங்கு பீக்அவர்ஸ் எனப்படும் அவசர நேரங்களில் பயணம் செய்வது சவாலான விஷயமாகவே மாறி விட்டது. அதே போல அங்கு ஆட்டோ, கார் சவாரிக்கு அதிக கட்டணங்களும் பெறப்படுவதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது உண்டு. ஆனால் பெங்களூரு பெண் ஒருவர் வெறும் 6 ரூபாய்க்கு ஊபர் ஆட்டோவில் சவாரி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த பெண் ஊபர் ஆட்டோ சவாரியில் வண்டியை முன்பதிவு செய்துள்ளார். அப்போது விளம்பர குறியீட்டை உள்ளிடும் போது அவருக்கு வெறும் 6 ரூபாய்க்கு சேவைகளை பெற முடிந்துள்ளது. இது சவாரிக்கான அசல் தொகை ரூ.46.24-ஐ விட மிகவும் குறைவாகும். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.