;
Athirady Tamil News

பாகிஸ்தான் இடைக்கால மந்திரி சபையில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மனைவி இடம் பெற்றதால் சர்ச்சை!!

0

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பதவி காலம் முடிவடையும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதனை அதிபர் ஆரீப்ஆல்வி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் வரை பாகிஸ்தானில் இடைக்கால பிரதமராக பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த எம்,பி.யான அன்வருல் ஹக்காகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையில் இடைக்கால மந்திரி சபை பதவி ஏற்றது. நிதி மந்திரியாக முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஹாம்சாத் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த இடைக்கால மந்திரி சபையில் மனித உரிமை மற்றும் பெண்கள் நல பிரிவின் உதவியாளராக முஷால்ஹூசைன் மவுலிக் என்ற பெண் இடம் பெற்று உள்ளார். இந்த பதவி மந்திரிகளுக்கு இணையான பதவி என்பது குறிப்பிடதக்கது.

முஷால் ஹூசைன் மவுலிக் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி தற்போது பாகிஸ்தான் இடைக்கால மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.