;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் – தண்ணீர் தாங்கி வாகனமும் மோதி விபத்து!!

0

மோட்டார் சைக்கிள் – தண்ணீர் தாங்கி வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று நண்பகல் யாழ்ப்பாணம் – ஏ9 முதன்மை வீதியின் செம்மணி வளைவிற்கு அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் (வயது -31) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

அவரது மனைவி மன்னாரைச் சேர்ந்த துரைராஜ் முகுந்தினி (வயது -26) படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.