;
Athirady Tamil News

உ.பி. முதல்வருடன் சந்திப்பு – பார்த்ததும் காலில் விழுந்து வணங்கிய ரஜினி!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே இமயமலைக்கு சென்ற நடிகர் ரஜினி ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு சென்றார்.

பின்னர், உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சியாக வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தை நடிகர் ரஜினி, அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் பார்த்தார். இவர்களுடன் லதா ரஜினிகாந்தும் இருந்தார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

அங்கு, யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி காந்த் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். ரஜினியை முதல்வர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன், ரஜினியின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார். நடிகர் ரஜினி நாளை அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.