;
Athirady Tamil News

அழகிகள் மசாஜ் செய்வதாக ஆசைகாட்டி ஐ.டி. ஊழியரை கட்டிபோட்டு நகை-பணம் பறிப்பு!!

0

சென்னை நுங்கம்பாக்கம் கோபால் நகர் நியூ காலனியில் வசித்து வருபவர் கார்த்தி. 29 வயதான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது செல்போன் எண் செயலி ஒன்றில் இருந்துள்ளது. அந்த எண்ணில் மர்ம நபர்கள் கார்த்தியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் ஒரு அறையில் மசாஜ் அழகிகள் இருக்கிறார்கள். நீங்கள் அங்கு வந்தால் அழகிகள் உங்களுக்கு மசாஜ் செய்வார்கள் என்று கூறியுள்ளனர். இதனால் மசாஜ் ஆசையில் ஐ.டி. ஊழியரான கார்த்தி குமரப்பா தெருவுக்கு சென்றார். அப்போது 2 பேர் அங்கு வந்து கார்த்தியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அழகிகள் மசாஜ் செய்யப்போகிறார்கள் என்கிற குதூகலத்தோடு அறைக்குள் நுழைந்த கார்த்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அறையில் எந்த பெண்களும் இல்லை.

இதுபற்றி அவர் கேட்பதற்குள், மசாஜ் ஆசை காட்டி அழைத்துச் சென்ற இருவரும் கார்த்தியை கீழே தள்ளி அங்கிருந்த தலையணையை கிழித்து கயிறாக்கி கை-கால்களை கட்டி போட்டனர். பின்னர் கார்த்தி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 1½ பவுன் செயின், ½ பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு வங்கி அட்டைகளையும் பறித்துச் சென்றனர். 3 வங்கி கார்டுகளில் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பணம் மற்றும் மணிபர்சில் இருந்து ரூ.4 ஆயிரம் பணம் ஆகியவற்றை அபேஸ் செய்து 2 பேரும் தப்பினர்.

இப்படி மசாஜ் ஆசையில் அனைத்தையும் பறிகொடுத்த கார்த்தி இதுபற்றி நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.